Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை அடுத்து கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தெலுங்கானா ஆளுனர்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:29 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்பட பல மசோதாக்களை தமிழக ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு உள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநரை போல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், தெலுங்கானா சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்கலை கிடப்பில் போட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு நேற்று நிலுவையில் உள்ள மூன்று மசோதாக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
நேற்று இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இதனை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் இரண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று மசோதாக்கள் மட்டுமே தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments