Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை அடுத்து கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தெலுங்கானா ஆளுனர்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:29 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்பட பல மசோதாக்களை தமிழக ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு உள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநரை போல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், தெலுங்கானா சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்கலை கிடப்பில் போட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு நேற்று நிலுவையில் உள்ள மூன்று மசோதாக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
நேற்று இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இதனை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் இரண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று மசோதாக்கள் மட்டுமே தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments