Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா! தமிழிசை செளந்திரராஜனுக்கும் சோதனை

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (09:34 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 8.50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தமிழிசை அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறிய போது, ‘நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தாங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். தொடக்கத்திலேயே சோதனை செய்தால் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம், மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்கலாம். எனவே தயக்கமின்றி உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments