Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பிக்கும் முன்னரே உடைந்த மூன்றாவது அணி: தெலுங்கானா முதல்வரால் திருப்பம்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (15:44 IST)
பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் முயற்சி எடுத்த நிலையில் 3வது அணி ஆரம்பிக்கும் முன்னரே முடிவுக்கு வந்துள்ளது.
 
சமீபத்தில் தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய ஆவேசமான பேச்சால் ஆச்சரியம் அடைந்த மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டினர். 
 
இந்த நிலையில் நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்காவிட்டாலும், பாகவிற்கு போதுமான இடங்கள் கிடைக்காதபட்சத்தில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து அரசு அமைக்க ஆதரவு தருவதாக சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
 
ஏற்கனவே பணமதிப்பிழப்பு உள்பட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments