Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:21 IST)
தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலுங்கானாவை சேர்ந்த ஞானேந்திரன் பிரசாத் என்பவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் அம்மாநிலத்தின் முக்கிய பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.,
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்விசிறியில் இருந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments