தொலைபேசி அழைப்புகளை, பெயருடன் காண்பிக்கும் முறை விரைவில் அமல்: டிராய் அறிவிப்பு

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (12:10 IST)
அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பெயருடன் காண்பிக்கும் முறை விரைவில் அமல் செய்யப்பட வேண்டும் என டிராய் தகவல் தெரிவித்துள்ளது.
 
தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க வேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொலைபேசி அழைப்பை அழைக்கப்படும் நபருக்கு பெயருடன் காண்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல் படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 தற்போது தொலைபேசி அழைப்பில் அழைக்கும் நபர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்கு வசதியாக ட்ரூகாலர் உள்பட பல செயலிகள் இருக்கும் நிலையில் இந்த விதி அமல் செய்யப்பட்டால் அந்த செயலிகளின் தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பயனர்களிடம் இருந்து பெரும் கேஒய்சி தரவுகளின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க முடியும் என்றும் இதை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments