Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 7 - கொரோனா சேப்டர் க்ளோஸ்: அடித்து சொல்லும் கேசிஆர்!!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:43 IST)
ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பேசியுள்ளார். 
 
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ள தெலங்கானா மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு வராமல் இருந்தால் ஏபரல் 7ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் பலியை ஏற்படுத்த போகிறது. கொரோனா தாக்குதலிலிருந்து மீள ஜூன் 1 ஆம் தேதி வரை ஆகும் என டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில்  சந்திரசேகரராவ் இவ்வாறு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments