Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:34 IST)
கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!
தெலுங்கானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த சிறுமியை வயல்வெளியில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவியை ஊருக்குள் விட அந்த கிராமத்தினர் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அந்த மாணவிக்கு தனியாக வயல்வெளியில் ஒரு தற்காலிக குடிசை போட்டு அதில் தங்க வைத்தனர் 
 
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிறுமியை ஊருக்குள் விட மறுத்த கிராமத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கொரோனா என்பது எதிர்பாராமல் ஏற்படும் தொற்று என்றும் அதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்களிடம் சுகாதார அதிகாரி அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments