Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:25 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி 5 மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதும் ஏப்ரல் ஐந்தாம் தேதி மக்கள் யோசிப்பதற்காக நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதில்லை. இதனை கணக்கில்கொண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments