Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!

கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!
, புதன், 31 மார்ச் 2021 (18:34 IST)
கொரோனா எதிரொலி: வயல்வெளியில் குடிசை போட்டு சிறுமியை தங்க வைத்த கிராமத்தினர்!
தெலுங்கானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த சிறுமியை வயல்வெளியில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவியை ஊருக்குள் விட அந்த கிராமத்தினர் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அந்த மாணவிக்கு தனியாக வயல்வெளியில் ஒரு தற்காலிக குடிசை போட்டு அதில் தங்க வைத்தனர் 
 
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிறுமியை ஊருக்குள் விட மறுத்த கிராமத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கொரோனா என்பது எதிர்பாராமல் ஏற்படும் தொற்று என்றும் அதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்களிடம் சுகாதார அதிகாரி அறிவுறுத்தினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்