Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த வேடிக்கை மனிதர்கள்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:57 IST)
அரசு பஸ் மோதியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றாமல், செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


 

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்வர் அலி (18). இவர் கொப்பல் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பணிக்கு தனது சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை காலை அன்வர் தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அப்போது, ஹொசபேட் நகரில் இருந்து ஹூப்ளி செல்லும் கர்நாடக அரசு பேருந்து அசோக சர்கிள் அருகே அன்வர் மீது மோதியது. இதில் அன்வர் படுகாயமுற்று இரத்த வெளியேற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

அன்வர் அடிபட்டு கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அவரை சுற்றி நின்று புகைப்படன் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

30 நிமிடங்கள் தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றாமல், செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments