Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இண்டர்நெட் கிடைக்கவில்லை: மரத்தில் ஏறி ஆன்லைன் பாடம் நடத்திய ஆசிரியர்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:18 IST)
மரத்தில் ஏறி ஆன்லைன் பாடம் நடத்திய ஆசிரியர்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தினார். ஆனால் அவரது மொபைல் போனுக்கு அவரது கிராமத்தில் சரியாக இன்டர்நெட் நெட்வொர்க் கிடைக்கவில்லை
 
இதனால் அவர் சற்றும் யோசிக்காமல் உடனடியாக அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைனில் பாடம் நடத்துகிறார். மரத்தில் உட்காருவதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகளை செய்து கொண்டு காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை அந்த மரத்திலேயே உட்கார்ந்து அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மாணவர்களின் படிப்புக்காக தான் இவ்வாறு செய்வதாகவும் தனது வீட்டில் எந்த பகுதியிலும் இன்டர்நெட் கிடைக்கவில்லை என்பதால் மரத்தில் ஏறி உட்கார்ந்து தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக பாடம் நடத்துவதாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments