Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகர் அறையில் தூங்கிய ராஜினாமா செய்ய போன எம்பி: வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:40 IST)
எம்பி பதவியை ராஜினாமா செய்ய போன தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சபாநாயகர் அறையில் இல்லாததால் அவரது அறையில் தூங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் நேற்று சபாநாயகரின் அறைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற சமயத்தில் சபாநாயகர் அறையில் இல்லை. இதனால் அவரது அறையிலேயே தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் தெலுங்குதேச எம்பிக்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஒரு எம்பி சபாநாயகர் அறையில் தலையணை எடுத்து தலைக்கு வைத்து தூங்க தொடங்கிவிட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments