Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு மெமோ? டிசிஎஸ் நிறுவனம் அதிரடி..!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (17:31 IST)
வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மெமோ அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் முறை தொடங்கப்பட்டது என்பதும் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போதும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அதன் சலுகைகளை அத்துமீறி உள்ளதாகவும் இதனை அடுத்து விளக்கம் அளிக்க மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
 
 டிசிஎஸ் விதித்த நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காத வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்கள் இனி வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் மாதத்தில் 12 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு உற்சாகமான பணியிட சூழலை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அலுவலகம் வரச் சொல்கிறோம் என டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments