Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள பட்ஜெட்.. பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:51 IST)
கேரளாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கேரள மாநிலத்தில் இன்று ரூபாய் 1150 கோடி கூடுதல் நிதி திரட்ட பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்கள் மீது புதிய செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த அறிவிப்பு காரணமாக பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் மீது லிட்டருக்கு இரண்டு ரூபாய் செஸ் வரியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீது 20 ரூபாய் 40 வரை செஸ் வரியும் விதிக்கப்பட்டுள்ளது 
 
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது எந்த விதமான அறிவிப்பும் இல்லை என்று குற்றம் சாட்டிய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் பெட்ரோல் டீசல் மீது கூடுதல் வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments