Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:27 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
 
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நேற்று அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவுக்கு அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டாடா அறக்கட்டளை குழுவினர் ஏகமனதாக நோயல் டாடாவை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும், புதிய தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, அதிகாரப்பூர்வமாக நோயல் டாடா அறக்கட்டளை குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை அவரே விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை- தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல்முருகன்!

கனமழை முன்னெச்சரிக்கை; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்!

பெண் வழக்கறிஞரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் தம்பி மீது புகார்!

5 நாள் சரிவுக்க்கு பின் தங்கம் விலை இன்று உயர்வு. சென்னை விலை நிலவரம்..!

அரசு மரியாதை உடன் ரத்தன் டாடா உடல் தகனம்: ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி ..

அடுத்த கட்டுரையில்
Show comments