Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கும் வெயிலை அடக்கும் மழை..! – 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (08:41 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எட்டியுள்ளது. எனினும் அவ்வபோது பெய்யும் மழையால் வெயிலின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

நேற்று டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments