Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கு வரும் இந்த மனசு? தமிழிசையை மெச்சும் மக்கள்!!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (09:56 IST)
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தற்போது உள்ள அபாய நிலையை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகளை மேற்க்கொண்டுவருகின்றன. 
 
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் 3650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்களும் அடக்கம். இவர்களை அம்மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து விசாரித்துள்ளார். 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தெலுங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் வகையில் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி வெகுவாக பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார். 
 
தமிழிசையின் இந்த செய்லை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தெலங்கானா மட்டுமின்றி தமிழக மக்களும் இவரது இந்த செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments