Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் எல்லை அருகே தமிழக இளைஞர் கைது.. சந்தேகத்துக்கு இடமாக நடமாட்டம் என தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
பாகிஸ்தான் எல்லையில் தமிழக இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் அருகே தமிழக  இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்ததாகவும் அவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்களை கூறியதாகவும் தெரிகிறது.
 
முதல் கட்ட விசாரணையில் தமிழகத்தின் தேனி பகுதியைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் தான் கைது செய்யப்பட்டவர் என்பது கூறப்படுகிறது. குஜராத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் என்ற சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியதால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments