Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழியில் இணையதளம்: திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (06:51 IST)
திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. ஆனால் தேவஸ்தானத்தின் இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் ஆங்கிலம் தெரியாதவர்கள் சிரமப்படுவதாகவும், இதனையடுத்து தென்னிந்திய மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன





இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் தனித்தனியாக இணையதளங்கள் தொடங்க முடிவு செய்தது. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடந்த பிரம்மோற்சவ விழாவின் போது, தெலுங்கு மொழியில் இணையதள சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் இம்மாதம் 1ஆம் தேதி கன்னட மொழியிலும் இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல் தமிழ் மொழியில் திருப்பதி தேவஸ்தான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில், முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தொடங்கிவைத்தார். இனிமேல் தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்பவர்கள் தமிழ் மொழி இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments