Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவிற்கு பதிலாக மத்தியபிரதேசம் சென்ற ரயில்: பயணிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (05:55 IST)
சாலை வழியாக பயணம் செய்யும் பேருந்துகள், கார்கள் சிலசமயம் டிரைவர் புதியவர் என்றால் வழிமாறி செல்வது வழக்கம். அதுவும் ஒருசில கிமீ தூரம் தவறாக சென்றவுடன் திருத்தி கொண்டு சரியான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் மகாராஷ்டிரம்செல்ல வேண்டிய ரயில் ஒன்று மத்தியபிரதேசம் சென்ற கூத்து ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது.





டெல்லியில் போராட்டம் செய்த சுமார் 1500 விவசாயிகள் தங்கள் போராட்டம் முடிந்தவுடன் சுவாபிமானி விரைவு ரயிலில் மகாராஷ்டிரா செல்ல புறப்பட்டனர். திங்கள் இரவு கிளம்பிய இந்த ரயில் மேற்கு நோக்கி செல்வதற்கு பதிலாக மத்திய பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அதாவது மகாராஷ்டிரா செல்லும் பாதைக்கு பதிலாக மத்தியபிரதேசம் செல்லும் பாதைக்கு சென்றுவிட்டது

இரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிவிட்டதால் ரயில் தவறான பாதையில் சென்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை. நீண்ட நேரம் கழித்து சுதாரித்த சில பயணிகள் ரயிலை செயினை இழுத்து நிறுத்தி எஞ்சின் டிரைவரிடம் நடந்த  தவறை கூறினர். இதனையடுத்து இந்த தகவல் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியான வழித்தடத்திற்கு திருப்பப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் இடையே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments