Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:04 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாதியில்    நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில்,  காங்கிரஸ் கட்சியும்  போட்டியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிவமோகா என்ற நகரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக  தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலையும் கலந்துகொண்டார்.  அப்போது,  வாக்கு சேகரிக்கும் வண்ணம் பிரச்சாரம கூட்டம் தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, அனைவரும் எழுந்த நின்றனர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர் நாடக மாநில கீதத்தைப் பாடும்படி கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாதியில்    நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments