Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் உயிரிழப்பதை கூட ஏற்க முடியாது: அர்விந்த் கெஜ்ரிவால்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:59 IST)
ஆக்ஸிஜன் இல்லாமல் ஒருவர் உயிரிழப்பதை கூட ஏற்க முடியாது என்றும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் உச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முதலில் தரும் சிகிச்சையான ஆக்சிஜன் தருவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது 
 
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் ஆக்சிஜன் சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த நிலையில் டெல்லி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
 
மேலும் ஆக்சிஜன் கிடைக்காமல் ஒருவர் கூட உயிரிழப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உடனடியாக டெல்லிக்கு போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments