Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹால் இன்று திறக்கப்படாது! – முடிவை மாற்றிய அரசு!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (09:10 IST)
கொரோனா கட்டுப்பாடுகளின் இரண்டாம் கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் மத்திய அரசு சில சலுகைகளையும் வழங்கி வருகிறது. முதற்கட்ட தளர்வுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்திய தொல்லியல்துறைக்கு உட்பட்ட வரலாற்று சின்னங்களை பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும், முன்னரே இ-பாஸ் பெற்றால் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 71 பகுதிகள் கொரோனா அதிதீவிர பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பாதுகாப்பு கருதி தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தாஜ்மஹால், பதேர்பூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை ஆகிய வரலாற்று சின்னங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments