Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

Mahendran
புதன், 9 ஏப்ரல் 2025 (11:50 IST)
மும்பை தாக்குதலையில் சதி செய்தவர் என்ற குற்றம் காட்டப்பட்ட தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
 
இதை அடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.
 
இதை அடுத்து டெல்லி திகார் சிறை அல்லது மும்பை சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும், இரு சிறைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவது மற்றும் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவது உள்பட அனைத்து பணிகளையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் தஹாவூர் ராணா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
மேலும் அவர் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு அவர் உதவி செய்ததும், அந்த உதவி நிரூபிக்கப்பட்டதையும் அடுத்து, அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. தற்போது அவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments