Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

abortion
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:03 IST)
திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
 
இந்த நிலையில் பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எப்.ஐ. மீதான தடையை எதிர்ப்பவர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள்- ஆர்.எஸ்.எஸ்.