Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (16:21 IST)
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
2024 நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில், மாலை 6 மணிக்கு மேல் 76 லட்சம் 'போலி வாக்குகள்' பதிவாகியதாக கூறி, மும்பையைச் சேர்ந்த சேதன் சந்திரகாந்த் அஹிரே என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை முதலில் தள்ளுபடி செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
 
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து மனுதாரர் தனது குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஒரு செய்தி அறிக்கை மற்றும் மூன்றாம் தரப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதில் மட்டுமே மனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேர்தலை ரத்து செய்வதற்கு போதுமான சட்டபூர்வ ஆதாரங்கள் அல்ல.
 
தேர்தல் தொடர்பான முறைகேடுகளை எதிர்த்து வழக்கு தொடுக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்யப்பட வேண்டும். சாதாரண ரிட் மனு மூலம் தேர்தலின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்க முடியாது’ என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: தேஜஸ்வி யாதவ்

சென்னையில் தெருநாய்கள் அட்டகாசம்: சிறுவனை துரத்தியதால் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments