Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாதம் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்படுவதில் வருத்தம்! – உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
நாட்டில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீது போதிய விவாதம் நடத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments