Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாதம் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்படுவதில் வருத்தம்! – உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
நாட்டில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீது போதிய விவாதம் நடத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments