Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செய்தி தொலைக்காட்சிகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன: சுப்ரீம் கோர்ட்

supreme
, சனி, 14 ஜனவரி 2023 (14:41 IST)
செய்தி தொலைக்காட்சிகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன என சுப்ரீம் கோர்ட்டுக்கு கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாட்டில் வெறுப்புணர்வு பேச்சுக்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறு பேசும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டன.
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பெரும் பொறுப்பை கொண்டுள்ளது என்றும் ஆனால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முழுமையான அச்சுறுத்தலாக மாறி உள்ளன என்றும் தெரிவித்தனர் 
 
குறிப்பாக தொலைக்காட்சிகள் பல ஆண்டு காலமாக இருந்தாலும் டிஆர்பியை மனதில் வைத்து செய்திகள் மேற்கொள்ளப்படுவதால் தொலைக்காட்சி ஒன்றுக்கொன்று போட்டியில் ஈடுபடுகின்றன என்றும் தொகுப்பாளர் நேர்மையாக இல்லாவிட்டால் விவாதிக்கும் பிரச்சினை பாரபட்சமாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்
 
செய்திச் தொலைக்காட்சிகள் சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவும் ஒரு வீரமரணம்தான்: கமல்ஹாசன் இரங்கல்