Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (11:26 IST)
தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என சற்று முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன் இந்த தீர்ப்பை வழங்கிய நிலையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக நான்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
 
தேர்தல் பத்திரங்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டது சட்டவிரோதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்றும் கருப்பு பணத்தை ஒழிக்க இது கண்டிப்பாக உதவாது என்றும் தகவல் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments