Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாரா? – உச்சநீதிமன்றம் கொடுத்த ஆப்சன்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (12:34 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அதை வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் கொரோனா, பறவைக்காய்ச்சல் போன்றவற்றால் டெல்லி கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசுக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசு வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் தனி குழு அமைப்பதாகவும், அதன்மூலம் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலிப்பதாக போராட்டத்தை திரும்ப பெற செய்வதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உரிய பதிலை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

இந்திய பொருட்களுக்கு அதிக வரி! கொதித்த அமெரிக்க மக்கள்! - ட்ரம்ப் சொன்ன புதிய காரணம்!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments