Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சநீதிமன்றத்தில் 50% பேருக்கு கொரோனா! – நீதிமன்றம் திடீர் அறிவிப்பு!

உச்சநீதிமன்றத்தில் 50% பேருக்கு கொரோனா! – நீதிமன்றம் திடீர் அறிவிப்பு!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:26 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பகுதி நேர, இரவு நேர ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி நீதிமன்ற வழக்குகளை நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியாக விசாரிப்பார்கள் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித மூளையில் சிப் பொருத்தும் திட்டம்! – எலான் மஸ்க்கின் முயற்சியில் முன்னகர்வு!