Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பி எண்ணப்போகும் ப.சிதம்பரம்? கைவிரித்தது உச்ச நீதிமன்றம்!

கம்பி எண்ணப்போகும் ப.சிதம்பரம்? கைவிரித்தது உச்ச நீதிமன்றம்!
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:48 IST)
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. மேலும் ப.சிதம்பரம் காவலை நீடிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. 
webdunia
இதனிடையே சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. வழக்கின் விசாரணைக்கு பின்னர், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. 
 
சிபிஐ ஏற்கனவே ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டதால் வழக்கு காலாவதியாகிவிட்டது. எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. 
webdunia
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீடிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அமலாகத்துறையும் சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மட்டுமே தடை விதித்துள்ளதால், அதன் பின்னர் அமலாக்கத்துறை கைது செய்தால் ப.சிதம்பரம் தரப்பிற்கு மேலும் சிக்கல் உண்டாகும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியர் கிரில்ஸுக்கு எப்படி ஹிந்தி தெரிந்தது??.. சந்தேகத்திற்கு விளக்கமளித்த மோடி