Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (15:59 IST)
மாட்டிறைச்சி குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.


 

 
கடந்த மே மாதம், நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும், கால்நடைகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, சந்தைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் விவசாய தேவைக்கு மட்டுமே. இதை மாடு விற்பவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
இது தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது, இன்னும் 3 மூன்று மாத காலத்திற்கு மாட்டிறைச்சி குறித்து எந்த புதிய கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. 
 
இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடையேயும் மத்திய அரசு ஆலோசனை கேட்டு வருவதாகவும், வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் அதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments