Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழி சாலை குறித்து உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி!.. மத்திய அரசின் பதில் என்ன??

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (12:10 IST)
சேலம்-சென்னை 8 வழி சாலை குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நிலத்தை கையகப்படுத்தாமல் இந்த திட்டத்தை தொடங்கமுடியாது. நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசுக்கு அனுமதி உண்டு. மேலும் 8 வழி சாலை திட்டம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான திட்டம் என்று தேசிய நெடுஞ்சாலை முறையிட்டுள்ளது. அதன் பின்பு, 8 வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தர தாமதமானால் என்ன செய்வீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 வழி சாலை திட்டத்தை தொடங்கமாட்டோம் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments