Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூட்டிங்கின் போது மர்மமான முறையில் இறந்த துணை நடிகை!

ஷூட்டிங்கின் போது மர்மமான முறையில் இறந்த துணை நடிகை!
, புதன், 11 ஜனவரி 2017 (10:05 IST)
ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் படப்பிடிப்பு நடந்து வந்த  இடத்திற்கு அருகே கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் கன்னட துணை நடிகை பத்மா மர்மமான முறையில் இறந்துள்ளார்.

 
கன்னட நடிகர் மனோரஞ்சன் நடித்து வரும் படம் விஐபி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தை நந்தகிஷோர்  இயக்குகிறார். திங்கட்கிழமை பெங்களூரில் ஏலஹன்கா அருகே உள்ள அவலஹள்ளியில் படத்தின் பாடல் காட்சி  படமாக்கப்பட்டது. அன்றைய படப்பிடிப்பின் போது 160 பேர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு முடிந்து மாலை அனைவரும் வீட்டிற்கு திரும்பும்போது துணை நடிகை பத்மாவதி(44) காணாமல் தேடினர். 
 
படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் லிப்ட் உள்ள பகுதியில் நடிகை பிணமாகக்  கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவலில் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா?