Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் முதல் மே வரை... வெயிலில் தாக்கம் எப்படி இருக்கும்??

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (09:10 IST)
இந்தியாவில் மார்ச் முதல் மே வரை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே வெப்பம் அதிகரித்து காணப்படுமாம். ஏப்ரல், மே மாதங்களில் 40 டிகிரியை தாண்டி வாட்டிவதைக்குமாம். உயிர் இழப்புகளும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஹரியானா, சண்டிகர், டெல்லி, சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதாம். அதாவது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஆனால், தென் இந்தியாவில் இயல்பை விட குறைவாக வெயில் பதிவாகும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments