Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

Mahendran
வியாழன், 24 ஏப்ரல் 2025 (10:24 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டுமென பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “பாஜகவுக்கு எதிர்காலத்தில் ஆட்சியை தொடரும் வாய்ப்பு இருக்க வேண்டுமெனில், தற்போதைய தலைமையில் இருப்பவர்கள்  நிர்வாகத்திலிருந்து விலக வேண்டும். கடந்த கால அரசியல் தலைவர்கள் ஓய்வெடுத்ததை போலவே, இவர்கள் இருவரும் அரசியல் ஓய்வை ஏற்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 
 பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு எதிராக அவ்வப்போது சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் ஆனால் அவரது பதிவை பாஜகவில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதைப்போல தான் மோடியும் அமித்ஷாவும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவருடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூட பாஜக தரப்பிடமிருந்து இதுவரை வெளிவந்ததில்லை என்பதும் எதிர்க்கட்சிகள் மட்டுமே அவர் கூறும் கருத்துக்களை வைரல் ஆக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments