Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமரை பிரதமர் மோடி இதுவரை பின்பற்றியதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

Mahendran
திங்கள், 22 ஜனவரி 2024 (11:25 IST)
கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட பிரதமர் மோடி ராமரை பின்பற்றியதில்லை என்று பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அவர் நேரில் காண உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை செய்து வரும் நிலையில் அவரது சொந்த கட்சியில் உள்ள சுப்பிரமணியன் சாமியும் விமர்சனம் செய்துள்ளார். 
 
அயோத்தி ராமர் கோயில் பூஜையில் மோடியின் பிரதமர் என்ற அந்தஸ்து பூஜ்ஜியம் தான் என்றும் அவர்  ஒரு சாதாரண மனிதராகத்தான் அங்கு இருப்பார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும்  பிரதமர் மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரை இதுவரை பின்பற்றியது இல்லை என்றும் அது மட்டும் இன்றி கடந்த 10 ஆண்டுகளில் அவர் ராம ராஜ்யத்தின் படி பிரதமராக நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். ராமர் கொள்கையை பிரதமர் மோடி தனது மனைவியுடன் கூட காட்டவில்லை என்றும் அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments