டிரம்ப் இந்திய வருகையால் ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை: சுப்பிரமணியன் சாமி

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (15:00 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை தர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்தாலும் பாஜகவை அவ்வப்போது விமர்சனம் செய்து வருபவர் சுப்ரமணியசாமி. சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்திருந்தார்
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறுகையில் ’அமெரிக்காவின் பொருளாதாரம் தான் அவருடைய வருகையால் உயரும் என்றும் நமது நாட்டின் பொருளாதாரம் உயர்த்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பாதுகாப்பு துறை சார் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன அதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் உயரும். அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்க நாம்தான் பணம் கொடுக்கப் போகிறோம். அமெரிக்கா ஒன்றும் இலவசமாக கொடுக்க போவதில்லை என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments