Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் இந்திய வருகையால் ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை: சுப்பிரமணியன் சாமி

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (15:00 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை தர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்தாலும் பாஜகவை அவ்வப்போது விமர்சனம் செய்து வருபவர் சுப்ரமணியசாமி. சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்திருந்தார்
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறுகையில் ’அமெரிக்காவின் பொருளாதாரம் தான் அவருடைய வருகையால் உயரும் என்றும் நமது நாட்டின் பொருளாதாரம் உயர்த்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பாதுகாப்பு துறை சார் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன அதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் உயரும். அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்க நாம்தான் பணம் கொடுக்கப் போகிறோம். அமெரிக்கா ஒன்றும் இலவசமாக கொடுக்க போவதில்லை என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments