Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிட் அடிக்க வேண்டுமா ?... அப்படியானால் – ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் !

பிட் அடிக்க வேண்டுமா ?... அப்படியானால் – ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் !
, திங்கள், 9 டிசம்பர் 2019 (15:09 IST)
சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிகள் ஆசிரியர் ஒருவரின் மேல் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் என்ற ஆசிரியரின் மேல் அவரிடம் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார்கள் உள்ளிட்ட பல புகார்களைக் கூறியுள்ளனர். இது குறித்து மாணவிகள் ‘தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என்றால் தினமும் எனக்கு சிக்கன் சமைத்துக் கொண்டுவா’ என்ற சொல்வதாகவும் மற்றொரு மாணவியிடம் ‘ என் உடல் ரீதியானத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும்’ எனக் கூறியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் சில மாணவிகளோ ‘ வரலாற்றுப் பாடத்தில் பிட் அடிக்கவேண்டுமென்றால் நான் சொல்வதை செய்யவேண்டும்’ எனவும் சொல்லியுள்ளனர். ஆனால் இந்த புகார்களை ஆசிரியர் ராஜேஷ் குமார் மறுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – பாஜக மூத்த தலைவர் கருத்து !