Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவன்: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:09 IST)
தலைநகர் டெல்லியில் 14 வயதான பள்ளி மாணவன் ஒருவன் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியின் கஜூரி காஸ் நகரில் உள்ள ஜீவன் ஜோதி பள்ளிக்கூடத்தில் 14 வயதான மாணவர் ஒருவன் நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இறந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த அந்த மாணவன் உட்பட 5 மாணவர்கள் கழிவறையில் சண்டை போட்டுக்கொண்டது கழிவறையில் இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments