Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய் கொடுத்து சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய சொன்ன மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (10:58 IST)
100 ரூபாய் கொடுத்து, தன்னுடன் படிக்கும் சக மாணவியை,   பாலியல் வன்கொடுமை செய்ய ஆள் செட் செய்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் தன்னுடைய ரேங்க் கார்டில் திருட்டுத்தனமாக பெற்றோரின் கையெழுத்து போட்டுள்ளார்.

அதனை அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் பார்த்துவிட்டு, ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். இதனால், சிறுமி மீது ஆத்திரம் கொண்ட சிறுவன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் கூறியதாகவும், அதற்காக 100 ரூபாய் கட்டணம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், அந்த மூத்த மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் இதைக் கூறிய நிலையில், பள்ளி நிர்வாகம் அந்த சிறுவனை அழைத்துக் கண்டித்துள்ளது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வந்ததால், அவர்கள் போலீஸிடம் புகார் அளித்தார்கள்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், கொலைக்கு திட்டம் போட்ட சிறுவனுக்கு 12 வயதுக்குள் இருப்பதால், அந்த சிறுவன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்