Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு..! துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு..!!

Senthil Velan
வியாழன், 18 ஏப்ரல் 2024 (17:26 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில், நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
 
முதல் கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர், சந்திராபூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சித்தூர், ராம்டெக் மக்களவைத் தொகுதியில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், நக்சல் பாதித்த பகுதியான கட்சிரோலி மலையோர பகுதிகளில் கன்னிவெடி வைக்கப்பட்டுள்ளதா என்று மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். ஆள் இல்லாத ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தினர். நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தல்..! எந்தெந்த மாநிலங்களில் தேர்தல்..?
 
சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, சமீபத்தில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுண்ட்டரில் 29 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments