Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: விளையாட்டுக்கு செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (08:29 IST)
வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்த இரண்டு குற்றவாளிகளிடம் விசாரணை செய்த போது விளையாட்டுக்காக கல் எறிந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
வந்தே பாரத் ரயில் மீது தொடர்ச்சியாக கல் எறியும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாவட்டம்  மேராமண்டலி - புதாபங்க் இடையே உள்ள பகுதியில் கடந்த 26 ஆம் தேதி புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது இரண்டு நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்தனர் இதனால் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்ணாடி சேதமடைந்தது. இதனை அடுத்து அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது தாங்கள் மது போதையில் இருந்ததாகவும் விளையாட்டுக்காக ரயில் மீது கல் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.  வந்தே பாரத் ரயில் மீது விளையாட்டுக்காக கல் எறிந்தேன் என்று இரண்டு குற்றவாளிகள் வாக்குமூலம் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments