Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்புக்காக மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி - - சுகாதாரத்துறை

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:38 IST)
சீனாவில் இருந்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைத் தடுக்க, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

அதனால், பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்குவதாகவும் ஏற்கெனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது  என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பரிந்துரைக்க போதுமான சான்றுகள் இல்லை என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 5 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஏப்ரல் 8-9 தேதிகளில் 2.5 லட்சம் கருவிகள் வழங்கப்படும் என  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கான  நிவாரண உதவியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரியிருந்த நிலையில் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளதாக  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments