Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டம் … மோடி அழைப்பு !!

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டம்  … மோடி அழைப்பு !!
, ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (13:51 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதுதொடர்பாக காணொலி மூலம் பாரத பிரதமர், மாநில முதல்வர்களுடனும், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்நிலையில், உள்நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார் . தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளதாகவும்செய்திகள் வெளியாகின்றன.
 
மேலும், பிரதமர் மோடி, தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து ஸ்டாலிடன் நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ அரசு, உழவர்களின் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்’’ - ராமதாஸ் டுவீட்