Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளாவை உற்று கவனிக்கும் மாநிலங்கள்! – தனிமைப்படுத்தல் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (11:23 IST)
ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் பணிகளில் பல மாநில அரசுகள் முக்கியத்துவம் காட்டி வருகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் லட்சங்களை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் லட்சக்கணக்கில் கும்பமேளாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களில் கும்பமேளாவுக்கு சென்ற மக்களை கண்காணிக்கவும், தனிமைப்படுத்தவும் மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அரசுகள் பல உத்தரவிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments