Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிப்பு – இந்திய நிலவரம்!

ஒரே நாளில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிப்பு – இந்திய நிலவரம்!
, ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (09:37 IST)
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,47,88,109 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,77,150 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 18,01,316 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேக் சாரின் ஆசையை நிறைவேற்றுவோம்! – மரக்கன்று நடும் விஜய் ரசிகைகள்!