Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உடல் நலக்குறைவு - ஸ்டாலின் கரிசனம்; வைகோ கவலை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (23:51 IST)
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

 
அங்குள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள தகவலில், ”உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
இதுபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments