Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யய்யோ!.. 95 சதவீத வீடுகள் பூகம்பத்தை தாங்காது

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (23:19 IST)
‘நாட்டில் உள்ள, 95 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பூகம்பத்தை தாங்கும் திறன் இல்லை’ என, தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
 

 
பூகம்ப அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக குஜராத், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பூகம்பத்தை தாங்கக் கூடியவை அல்ல.
 
தற்போது நாடு முழுவதும், 30 கோடி வீடுகள் உள்ளதாகவும், அவற்றில் 95 சதவீத வீடுகள், பூகம்பத்தை தாங்கும் திறன் அற்றவை என்றும் தெரிவித்துள்ளது.
 

 
சமீபத்திய நில அதிர்ச்சி மண்டலம் வரைபடம் படி இந்தியாவின் நிலப்பரப்பில் 59 சதவீதம் மிதமான அல்லது கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்படையக் கூடியதாக உள்ளது தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி புதிய வரைபடம் ஒன்றையும் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments